சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ் மாணவனின் கனவு!

PARIS TAMIL  PARIS TAMIL
சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ் மாணவனின் கனவு!

 2016ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுகள் இன்று காலை வெளியானது. 

 
இந்த பெறுபேறுகளின் அடிப்படையில், அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஐந்தாமிடத்தையும், தமிழ் மொழி மூலம் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார். 
 
யாழ்.இந்து கல்லூரி சேர்ந்த மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் அதிசிறந்த A சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளார்.
 
இவ்விடயம் குறித்து அ.அபிநந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
 
எனது தாய் ஆசிரியர், தந்தை மருந்தாளர் எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் நான் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன்.
 
இந்நிலையில் உயிரியல், விஞ்ஞான துறையில் தொடர்ந்து கல்வி கற்பதற்கு விரும்புகிறேன். அது தவறினால் நோய்கள் பற்றிய ஆய்வுதுறையில் கல்வியை கற்க விரும்புகிறேன். அதேபோல் எனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள் என எனவும் தெரிவித்துள்ளார்.
 
 

மூலக்கதை