வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கும் விழா

தினமலர்  தினமலர்
வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை, அமெரிக்கா தமிழ்நாடு மையம் சார்பில் புதிய வீடுகள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜரத்தினம் தலைமை தாங்கினார். சிவசைலம், நாகப்பன், சிவக்குமார், சொர்ணாபிள்ளை முன்னிலை வகித்தார். அறக்கட்டளை செயல் இயக்குனர் வசுமதி பென்னி வரவேற்றார். திட்ட அறிக்கையை தொழில்நுட்ப ஆலோசகர் கருணாகரன் வாசித்தார். பெங்களூர் என்.டி.டி.எப்., மேலாண் இயக்குனர் ரகுராஜ் புதிய வீடுகளை திறந்து வைத்து பேசினார். 43 பயனாளிகளுக்கு சிவசைலம், ரகுராஜ் ஆகியோர் புதிய வீடுகளுக்கான சான்றிதழ்களை வழங்கினர்.விழாவில், கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செல்வராஜ், புஷ்பராஜ், கிராமங்களை பயனாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அறக்கட்டளையை சேர்ந்த கவிதா சுரேஷ் நன்றி கூறினார்.

மூலக்கதை