தமிழக பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை: தமிழக பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டுவரக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.