காதல் கதையை விவரிக்கும் ஆன்ட்ரியா
ராமின் ‘தரமணி’ படத்தில், தன்னுடைய காதல் கதையை ஆன்ட்ரியா விவரிப்பது போல் கதையின் போக்கு அமைந்துள்ளது.
ராம் இயக்கத்தில் அஞ்சலி, ஆன்ட்ரியா, வசந்த் ரவி நடித்துள்ள படம் ‘தரமணி’. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பொதுவாக, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு ஆணின் பார்வையில்தான் கதை சொல்லப்பட்டிருக்கும். அதுவும் காதல் கதை என்றால் கேட்கவே வேண்டாம்.
ஆனால், இந்தப் படமானது, பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, தன்னுடைய காதல் கதையை ஆன்ட்ரியா விவரிப்பதுதான் படமாம். சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ‘ஓம் சாந்தி ஓசானா’ படமும் இப்படித்தான்.
நிவின் பாலியின் காதலைப் பெற நஸ்ரியா செய்யும் பிரயத்தனமும், அதை அவரே கதையாகச் சொல்வதும்தான் படம்.
அந்த முயற்சி அங்கு சக்சஸ் ஆனதால், அந்த முயற்சியைத் தமிழில் எடுத்திருக்கிறார் ராம்.
.