இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு! சந்தேக நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

PARIS TAMIL  PARIS TAMIL
இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு! சந்தேக நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
யாழ். நீதிவான் சதீஸ்கரன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
யாழ். நீதிவான் சதீஸ்கரனின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளத்தில் குறித்த நபரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தீவிரமான தேடி வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
 
39 வயதான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவராசா ஜயந்தன் என்ற நபரே குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை