இலங்கையில் இரண்டு அமெரிக்கர்கள் கைது
இலங்கை இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிந்த - யால பகுதி அருகே கடல் எல்லையில் வைத்து பொழுதுபோக்குக்காக துப்பாக்கிகள் (ஸ்பியர் துப்பாக்கி) பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு அமெரிக்கர்களும் உள்ளடங்குகின்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் மீன்பிடிக்காக பயன்படுத்திய 03 துப்பாக்கிகள் மற்றம் ஏனைய பொருட்களும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.