இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல்! பிரதான சந்தேக நபர் சரண்
நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தே நபர் சரணடைந்துள்ளார்.
இன்று காலை 8.20 மணியளவில் அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சரணடைந்தரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.