இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பயணிகளுக்கு டெங்கு நோய் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அமெரிக்கர்களுக்கு இது தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
டெங்கு நோயை தடுக்க தடுப்பூசி அல்லது மருந்து தற்போது இல்லாத நிலையில், நுளம்பு கடித்தலைத் தடுக்கும் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கர்களுக்கு பயண பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கையில் சுகாதார அமைச்சு டெங்கு நோய் தொற்று பற்றி அறிவிப்பு விடுத்துள்ளது. இலங்கையில் 103,114 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 250 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
அதிகரித்து வரும் நுளம்புகளை கட்டுப்பாடுத்தும் முயற்சிகள் மற்றும் நோயாளிகளை கையாள சுகாதார அமைப்பின் திறனை பொது சுகாதார அதிகாரிகள் பலப்படுத்தி வருகின்றனர்.

மூலக்கதை