எப்­போது திரும்பி வரும் ரூ.2 லட்­சம் கோடி?

தினமலர்  தினமலர்
எப்­போது திரும்பி வரும் ரூ.2 லட்­சம் கோடி?

வங்­கி­களின் வாராக்­க­டனை வசூல் செய்ய வந்­தி­ருக்­கும், வலி­மை­யான ஆயு­தம் தான், புதிய திவால் சட்­டம். 12 பெரிய நிறு­வ­னங்­கள் மீது, சட்ட ரீதி­யாக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­யால், 2 லட்­சம் கோடி ரூபாய் திரும்ப வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவ்­வ­ள­வும் திரும்பி வருமா?

வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்னை, பெரிய தலை­வலி. பொதுத் துறை வங்­கி­களும், தனி­யார் வங்­கி­களும் என்ன தான் லாபம் சம்­பா­தித்­தா­லும், ஏற்­க­னவே கொடுத்து, திரும்ப வரா­மல் போன தொகை, அவற்­றின் ஒட்­டு­மொத்த வலி­மையை சிதைக்­கின்றன.பல வங்­கி­கள், வாராக்­க­டன்­களை சீர்­செய்ய, பல முயற்­சி­களை மேற்­கொண்­டன. குறிப்­பாக, கடனை திருப்­பித் தர வேண்­டிய காலத்தை, 20 – 25 ஆண்­டு­கள் வரை நீட்­டித்­துக் கொடுத்­தன. புதிய கடன்­கள் மூலம், பல நிறு­வ­னங்­களை இயங்க செய்து, அதன் மூலம் வரு­வாய் ஈட்டி, பழைய கடன்­களை பைசல் செய்ய வாய்ப்பு அளித்­தன. இவை எது­வுமே பயன் தர­வில்லை.இந்­நி­லை­யில் தான், புதிய திவால் சட்­டம் அம­லுக்கு வந்­தது. கூடவே, மத்­திய அரசு, கடனை திரும்­பச் செலுத்­தாத நிறு­வ­னங்­கள் மீது, உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு, மத்­திய ரிசர்வ் வங்­கிக்கு அனு­ம­தி­யும் வழங்­கி­யது. விளைவு, கடன்­களை கட்­டாத, 500 நிறு­வ­னங்­களை, ஆர்.பி.ஐ., ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி, அதில், முதல், 12 நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை வெளி­யிட்­டது.சிக்கல்கள்இவர்­கள் எல்­லா­ரும், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்­ற­வர்­கள். அதில், 60 சத­வீ­தம் வரை, வாராக்­க­டன்­க­ளாக மாறி­விட்­டவை. மிச்­ச­முள்ள, 488 நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து, அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் கடனை வசூல் செய்ய வேண்­டும். திரும்­பப் பெற முடி­ய­வில்லை என்­றால், அவை­யும் திவால் சட்­டத்­தின் கீழ் கொண்டு வரப்­படும்.தேசிய நிறு­வன சட்ட தீர்ப்­பா­யம் தான், 12 நிறு­வ­னங்­களின் தலை­யெ­ழுத்தை நிர்­ண­யிக்­கப் போகும் இடம். வழக்கு பதிந்த, 14 நாட்­க­ளுக்­குள், குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தின் மீது, திவால் நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கும் முடிவை, தீர்ப்­பா­யம் எடுக்­கும். அனு­ம­திக்­கப்­பட்­டால், திவால் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளும் அலு­வ­லரை, தீர்ப்­பா­யம் நிய­மித்து, 180 நாட்­க­ளுக்­குள், அதற்­கான திட்­டத்தை வழங்­கச் சொல்­லும். தேவைப்­பட்­டால், கூடு­த­லாக, 90 நாட்­களும் வழங்­கப்­படும். 270 நாட்­களில், குறிப்­பிட்ட நிறு­வ­னங்­களின் நிர்­வா­கக் குழு இயங்க முடி­யாது.இந்த கால கட்­டத்­திற்­குள், பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தை வேறொ­ரு­வரோ, வேறு குழு­மமோ வாங்­கு­வ­தற்கு ஏது­வான திட்­டத்தை தயா­ரித்து வழங்க வேண்­டும். 270 நாட்­க­ளுக்­குள் திட்­டம் ஏதும் உரு­வா­க­வில்லை என்­றால், அந்­நி­று­வ­னத்­தின் சொத்­து­களை ஏலத்­துக்கு கொண்டு வரு­வதை தவிர, வேறு வழி­யில்லை.அப்­பாடா! சட்ட நட­வ­டிக்கை என்ன என்­பதை, ஒரு மாதிரி, 250 வார்த்­தை­க­ளுக்­குள் சொல்­லி­விட்­டேன். பிரச்­னைக்கு வரு­வோம். எங்­களை மட்­டும் ஏன் தனி­மைப்­ப­டுத்தி, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என, பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள் நீதி­மன்­றங்­களை அணு­கின. ஆனால், அவை நிரா­க­ரிக்­கப்­பட்­டன என்­பது நல்ல செய்தி. அதே சம­யம், வேறு சில முக்­கி­ய­மான கேள்­வி­கள் தான், திவால் நடை­மு­றையை சிக்­க­லாக்­கு­கின்றன.முதல் விஷ­யம், பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­களை யார் வாங்­கு­வ­தற்கு முன்­வ­ரு­வர்? அவை, ஏற்­க­னவே நஷ்­ட­மான நிறு­வ­னங்­கள். அதன் மீது இருக்­கும் கடன்­களோ எக்­கச்­சக்­கம். வாங்­கு­ப­வர்­க­ளுக்கு சாத­க­மாக, வங்­கி­கள் இந்த கடன்­களில் ஒரு பகு­தி­யையோ, வட்­டி­யையோ தள்­ளு­படி செய்து தர வேண்­டும். இதை தான் ஆங்­கி­லத்­தில், மிக­வும் நாசூக்­காக, ‘ஹேர்­கட்’ என, குறிப்­பி­டு­கின்­ற­னர். இந்த முடி திருத்­தத்­துக்கு வங்­கி­கள் தயாரா? எவ்­வ­ளவு துாரம் தள்­ளு­படி செய்ய முடி­யும்?தள்­ளு­படி செய்­யப்­படும் தொகையை சமா­ளிக்க, இந்­திய வங்­கி­கள், 18 ஆயி­ரம் கோடி ரூபா­யை­யா­வது ஒதுக்கி வைக்க வேண்­டும் என, ஓர் ஆய்வு நிறு­வ­னம் கணித்­தி­ருக்­கிறது. இன்­னொரு கணக்­கும் சொல்­லப்­ப­டு­கிறது. ரூபாய்க்கு, 60 பைசா திரும்பி வந்­தாலே போதும்; 40 பைசாவை விட்­டுக் கொடுப்­ப­தில் தவ­றில்லை என்று.விஜய் மல்­லையா, மொத்த கட­னில், 6,868 கோடி ரூபாயை கட்­டு­வ­தாக தெரி­வித்த போது, இந்­திய வங்­கி­கள் முறுக்­கிக் கொண்­டன. மொத்த தொகை­யை­யும் கட்­டி­னால் தான், ஆச்சு என்று அடம்­பி­டித்­தன. கடை­சி­யில், ஒன்­றுமே கட்­டா­மல், வெளி­நாடு தப்பி ஓடி­யது தான் நிகர லாபம். ஆக, கிடைக்­கும் வரை லாபம் என, வங்­கி­கள் நடந்து கொள்ள வேண்­டும் என்­பது, சமீ­பத்­திய சிந்­தனை.இன்­னொரு தக­வ­லோடு இணைத்து பார்த்­தால் தான், இதன் அர்த்­தம் இன்­னும் தெளி­வாக தெரி­யும். உலக நாடு­கள் பல­வற்­றி­லும், திவால் சட்­டம் உண்டு. திவால் நட­வ­டிக்கை நிறைவு பெற்று, தீர்வு காண எவ்­வ­ளவு கால­மா­கும் என்­பதை பற்­றிய கணிப்பை, உலக வங்கி வெளி­யிட்டு உள்­ளது. அதன்­படி, சிங்­கப்­பூ­ரில், 10 மாதங்­களில் நட­வ­டிக்­கை­கள் நிறைவு பெற, பிரிட்­ட­னிலோ, ஓராண்டு ஆகிறது. சீனா­வில், இரு ஆண்­டு­கள் ஆக, இந்­தி­யா­விலோ, 4.3 ஆண்­டு­கள் ஆகின்றன! மேலும், இது­வரை, ரூபாய்க்கு, 25.7 பைசா தான் திரும்ப வந்­தி­ருக்­கிறது. இத­னோடு ஒப்­பி­டும் போது, 60 பைசா பெரிய தொகை தானே? என, வாதம் வைக்­கப்­ப­டு­கிறது.இன்­னொரு பெரிய பிரச்னை, நிறு­வ­னங்­களின் மதிப்பை கணக்­கி­டு­வது. அதற்கு நிர்­வா­கக் குழு­வி­ன­ரும், உள்ளே இருக்­கும் பணி­யா­ளர்­களும், திவால் குழு­வி­ன­ருக்கு உதவ வேண்­டும். இது, இணக்­க­மாக நடை­பெ­றும் என்­ப­தற்கு உத்­த­ர­வா­த­மில்லை. இத­னால், நிறு­வ­னத்­தின் மதிப்பை கணக்­கி­டு­வ­தில் குழப்­பம் ஏற்­ப­ட­லாம்.எச்சரிக்கைமேலும், திவால் குழு­வி­னர், முற்­றி­லும் வெளி­யி­லி­ருந்து வரும் துறை சார்ந்த வல்­லு­னர்­கள். அவர்­க­ளால், வங்­கி­களும், நிறு­வ­னங்­களும் ஏற்­கும் ஒரு சம­ரச திட்­டத்தை வகுத்­துத் தர முடி­யுமா என்­பது, இன்­னும் கேள்­வி­யா­கவே இருக்­கிறது.பெரிய நிறு­வ­னங்­கள் இப்­ப­டிப்­பட்ட பிரச்­னை­களை சந்­தித்­துக் கொண்­டி­ருக்க, சிறு மற்­றும் குறுந்­தொ­ழில்­களும் வங்­கிக் கடன்­களை கட்­டா­மல், திவால் நட­வ­டிக்­கைக்கு உள்­ளாகி வரு­கின்றன. அது, அடுத்­தொரு பெரிய கதை­யாக தொட­ரப் போகிறது. வங்­கி­களை பொறுத்­த­வரை, கொடுத்த கடன்­களை முடிந்த வரை மீட்க வேண்­டும் என, முயற்சி செய்­கின்றன. இதி­லி­ருந்து திரும்ப வரக்­கூ­டிய தொகை மிக­வும் குறை­வாக இருந்­தால், ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. ஆனால், வங்­கிக் கடனை திரும்­பச் செலுத்­தா­விட்­டால், நட­வ­டிக்­கையே இராது, தப்­பித்­து­வி­ட­லாம் என, நம்­பும் நிறு­வ­னங்­க­ளுக்கு, இத்­த­கைய முயற்­சி­கள் ஒரு எச்­ச­ரிக்கை மணி­யா­கவே இருக்­கும்.ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

மூலக்கதை