கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் பிரஜை!
பிரான்ஸ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு மணிக்ககற்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவரிடம் இருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களும் மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.