துருக்கியில் பூகம்பம்: 2 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
துருக்கியில் பூகம்பம்: 2 பேர் பலி

அங்காரா : துருக்கி அடுத்த கிரீக் தீவு, போட்ராம், டாட்கா ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 1. 30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6. 7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இதனால் வீடுகள், ஹோட்டல்கள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்ததும், உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறத் தொடங்கினர். சாலைகளில் பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சமடைந்த மக்கள் கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பு படையினருடன் இணைந்து  மீட்க ஆரம்பித்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   துருக்கியில் கடந்த 2011 -ல், 7. 2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 600க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை