சீனாவில் அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்

தினமலர்  தினமலர்
சீனாவில் அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்

பெய்ஜிங்:சீனாவில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக ஓடக்கூடிய புல்லட் ரெயில் சேவை இன்று(ஜூன்-26) தொடங்கியது.
சீனா, ரயில்வே பயணிகளை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளின் முன்னணி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பம் உதவியுடன் 13 ஆண்டுகளில் இந்த அதிவேக புல்லட் ரயிலை தயாரித்துள்ளது.சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை இன்று பயணிகள் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நகரங்களில் இருந்தும் தனித்தனியாக காலை 11 மணியளவில் புல்லட் ரயில்கள் ஓடத் தொடங்கின. பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்ட ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் பயணம் செய்து ஷாங்காயை அடைந்தது. ஜினான், ஷாண்டாங் மாகாணம் மற்றும் தியான் ஜின் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் நின்று சென்றது.முதலில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதன்பின், படிப்படியாக வேகத்தை அதிகரித்து 400 கிலோமீட்டர் செல்லும்.

மூலக்கதை