ஐ.எஸ். தாக்குதல் : ஈராக்கில் மசூதி தகர்ப்பு

தினமலர்  தினமலர்
ஐ.எஸ். தாக்குதல் : ஈராக்கில் மசூதி தகர்ப்பு

இர்பில் : ஈராக்கில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த குல்தூரி மசூதி, ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

மேற்காசிய நாடான ஈராக்கின் மொசூல் நகரில் பெரிய மசூதி என அழைக்கப்படும் புகழ்பெற்ற அல்நூரி மசூதி உள்ளது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமைவாய்ந்த இந்த மசூதியில் நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அதில் ஆங்காங்கே பயங்கர வெடிபொருட்களை வைத்துச்சென்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு, இந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் பெரிய மசூதி இடிந்து தரைமட்டம் ஆனது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டுவரும் இந்த நேரத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் மசூதி தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை