டிரம்ப் மனநலம் : வடகொரியா விமர்சனம்
சியோல்: வடகொரியாவால் கைது செய்யப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வாரம்பியர்,22. கோமா நிலையிலேயே உயிரிழந்தார். இந்த
சம்பவத்தால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம்
பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.
வடகொரியாவின் அரசு கூறியிருப்பதாவது:- “அமெரிக்க அதிபர் கடினமான சூழ்நிலையில் உள்ளார். எனவே மக்களை திசைத் திருப்ப வடகொரியா மீது முன் தவிர்ப்புத் தாக்குதலை நடத்தலாம், என்ற யோசனையுடன் அமெரிக்கா விளையாடி வருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட டிரம்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் தென் கொரியாவுக்கு பேரழிவு ஏற்படும் என்பதை அந்நாடு உணர வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.