ஜி.எஸ்.டி., நடைமுறையில் கெடுபிடி இருக்குமா?
கோல்கட்டா : மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா கூறியதாவது: தற்போதைய, பல முனை வரிகளில் வணிகர்கள் சந்திக்கும் சிக்கல், வரி உயர்வால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு போன்ற பிரச்னைகள் எதுவும், ஜி.எஸ்.டி.,யில் இருக்காது.
நாடு முழுவதும், ஒரே மாதிரியான வரி விதிப்பு இருக்கும் என்பதால், தற்போது, வேறு மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்புவதில், வர்த்தகர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நுகர்வோருக்கும் ஒரே சீரான விலையில் பொருட்கள் கிடைக்கும். எனினும், தற்போதைய, ‘வாட்’ வரி நடைமுறையில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறும் போது, துவக்கத்தில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதனால், ஏற்றுமதியாளர்களுக்கு, ஜி.எஸ்.டி., நடைமுறையில் கணக்குகளை தாக்கல் செய்ய, இரு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
சுமுகமான முறையில், எளிதாக புதிய வரி விதிப்புக்கு மாறுவதையே, அரசு விரும்புகிறது. அதனால், துவக்க காலத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாக, கெடுபிடி எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.