திருச்சூர் அருகே கள்ளநோட்டு தயாரித்த பா.ஜ. பிரமுகர் கைது

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே மதிலகம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ்(33). இவர் பா.ஜ. இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவின்  திருச்சூர் எஸ்என்புரம் நகர தலைவராக உள்ளார். இவர் கந்துவட்டி வசூலிப்பதாக இரிஞ்ஞாலக்குடா போலீஸ் உதவி கமிஷனர் கிரண் நாராயணனுக்கு  தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று ராகேஷ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்பாேது அவரது வீட்டில் ரூபாய் 2000, 500 கள்ள நோட்டுகள் இருந்ததை பார்த்து  அதிர்ச்சியடைந்தனர். மேலும் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. போலீசார் ராகேஷை கைது செய்தனர். விசாரணையில்  அவரது அண்ணன் ராஜீவிற்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை