நீதிபதி கர்ணனுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் கோவையில் கைது  செய்யப்பட்டார். இதையடுத்து கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள  எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் அதே மருத்துவமனையில் கர்ணன் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சிறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீதிபதி கர்ணனுக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில்  பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவர் சிறையில் மற்ற  கைதிகளைப்போல் தான் நடத்தப்படுகிறார்./இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை