Aulnay Sous Bois தீவிபத்தில் ஒருவர் பலி! - ஐவர் படுகாயம்!!
இன்று வியாழக்கிழமை காலை Aulnay-sous-Bois பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பலத்த தீ விபத்தி இடம்பெற்றது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை 6 மணி அளவில், Aulnay இன் Commander Marchand மற்றும் Avenue Voilaume சாலைகளை இணைக்கும் முனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பலர் ஜன்னல் வழியாக அபாய குரல் எழுப்பியதாகவும், தீயணைப்பு படை வீரர்கள் பலத்த போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்குரிய காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில், விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், மேலும் ஐவர் தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருந்து பல சிறுவர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், 76 தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.