நேற்றிரவு 116 பேர் கைது!! அதீத வன்முறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
நேற்றிரவு 116 பேர் கைது!! அதீத வன்முறை!!

நேற்று பரிசிலும், அதன் புறநரப்பகுதிகளிலும் நடந்த இசைவிழாவில், அதீத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுளளன. பேருந்து நிறுத்தங்கள் உட்படப் பல பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
 
இது தொடர்பாக 142 பேர் கைது செய்ப்பட்டு, 116 காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். களவு, வேண்டுமென்றே செய்யப்பட்ட வன்முறை, சட்டவிரோதமான போதைப் பொருட்களை வைத்திருந்தமை, பொதுமக்கள் சொத்திற்குச் சேதம் விளைவித்தமை, மற்றும் கற்கலால் காவற்துறைனர் மீது தாக்குதல் நடாத்தியமை போன்ற குற்றங்கள் பதிவாகி உள்ளன.
 
 
நேற்று மிகவும் அதிகளவான காவற்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தும் வன்முறைகள் நடக்கத் தவறியிருக்கவில்லை.
 

மூலக்கதை