கடன் தள்ளுபடி செய்வது பேஷன் போல் ஆகிவிட்டது: வெங்கையா நாயுடு

தினகரன்  தினகரன்

மும்பை: நம் நாட்டில் கடன் தள்ளுபடி என்பது பேஷன் போல் ஆகிவிட்டது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டியதுதான், ஆனால் மிகவும் இக்கட்டான சூழலில் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னதாக உத்திரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்தது. தற்போது கர்நாடகாவிலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை