திருவள்ளூரில் நடைபெற்றது புரட்சி பாரதம் ஆய்வு கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூரில் நடைபெற்றது புரட்சி பாரதம் ஆய்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் தலைமை கண்காணிப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் பூவை எம். ஜெகன்மூர்த்தி தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் கூடப்பாக்கம் இ. குட்டி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சி. பி. குமார், கூடப்பாக்கம் இ. ஜேம்ஸ், நயப்பாக்கம் மோகன், கோவிந்தன், செல்வம் முன்னிலை வகித்தனர்.

உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பூவை முகிலன், எம். மாறன், முல்லை கே. பலராமன், கே. எஸ். ரகுநாத், பூவை. சரவணன், டி. ருசேந்திரகுமார், வலசை எம். தருமன், ஜான்சன் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். இதில் மேற்கு மாவட்ட பொருளாளர் ரவி மாற்றப்பட்டு, ஆர். கே. பேட்டை எம். கே. செல்வம் மாவட்ட பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

மத்திய மாவட்ட வர்த்தக அணி தலைவராக பேரம்பாக்கம் டி. எம். முத்து நியமிக்கப்பட்டார்.

நகர தலைவர் எழில்வண்ணன் நன்றி கூறினார்.

.

மூலக்கதை