புதிய அரசு அறிவிப்பும் பிரதமரின் காரசாரமான கருத்துக்களும்..!
புதிய அரசின் முற்று முழுதான பட்டியல் அறிவித்ததன் பின்னர், சற்று முன்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் Edouard Philippe பல கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.
இதில் எதிர்பார்த்ததன் படி MoDem கட்சியைச் சேர்ந்த Sylvie Goulard, François Bayrou மற்றும் Marielle de Sarnez ஆகியோர் அமைச்சரவையில் இருக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதன் காரணமாக இவர்கள் தொடர்ச்சியாக பதவி விலகினார்கள். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் Edouard Philippe பல ஆக்ரோசமான கருத்துக்களை முன்வைத்தார். நேர்காணலில், MoDem கட்சியினரின் ஊழல் சர்ச்சைகள் குறித்தும், François Bayrouஇன் முடிவு குறித்து கேட்கப்பட்டது. 'ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது எத்தனை சரியானதோ, அதேவேளை அது நிரூபிக்கப்படாமல் பதவி விலகச் சொல்வது கட்டாயப்படுத்துவது சரியானதல்ல. MoDem கட்சியினர் மீது இதுவரை எவ்வித வழக்குகளும் பதிவாகவில்லை. வழக்கு நிரூபிக்கப்படாமல் ஒரு அரச ஊழியரோ, பத்திரிகையாளனோ வேறு யாரேனுமோ பதவி விலகுவார்களா?' என சரமாரியாக தன் கருத்துக்களை முன்வைத்தார்.