ஈரான் ராணுவத்தின் 3 உயரதிகாரிகள் கைது

தினமலர்  தினமலர்

ரியாத்: சவுதி அரேபிய நாட்டுக்கு உள்பட்ட மர்ஜன் எண்ணெய் கிணற்றின் அருகே உள்ள கடற்பகுதியில், ஈரான் ராணுவத்தின் 3 உயரதிகாரிகளை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது.
சவுதி அரேபிய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகளுடன், ௩ மர்ம படகுகள் செல்வதை கவனித்தனர்.
அதில், ஒரு படகு மட்டும் பிடிபட்டது. அந்த படகில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும், அதிலிருந்த ௩ ஈரான் ராணுவ உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இத்தகவலை ஈரான் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

மூலக்கதை