மாணவர்கள் சிறைபிடிப்பு

தினமலர்  தினமலர்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். பிலிப்பைன்ஸ் மார்வாய் நகரில் ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதிகளுக்கும், அரசு ஆதரவு படைகளுக்கும் சண்டை நடக்கிறது. அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பள்ளி மாணவர்களை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுமக்கள் சிலரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். எத்தனை பேர் பிடிபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரிக்கிறோம். அடையாளம் காணும் பணியும் நடக்கிறது' என்றார்.

மூலக்கதை