சமரசம் செய்ய கடுமையாக முயற்சித்தோம்: பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா

தினகரன்  தினகரன்

கேப்டன் கோஹ்லி - பயிற்சியாளர் கும்ப்ளே இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்து வைக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் கடுமையாக முயற்சி செய்யப்பட்டது.  செயலாளர், தலைமை செயலதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எங்களின் சமரச முயற்சி பலனளிக்கவில்லை. கும்ப்ளே தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைய பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கை தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். அவர் நிச்சயம் மிகச் சிறந்த பயிற்சியாளராக இருப்பார். கேப்டனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறுவது தவறு. அனைவருக்குமே முக்கியத்துவம் அளிக்கிறோம். சில சமயம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. அவர்களும் மனிதர்கள் தானே.

மூலக்கதை