இங்கிலாந்து ராணியின் கணவர் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்து இளவரசி  எலிசபத்தின் கணவரும் எடின்பரோ கோமகன் என்றழைக்கப்படும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பிரிட்டன் அரசி ராணி எலிசபத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப் திடீரென நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் எத்தகைய உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவிக்கவில்லை. 96 வயதாகும் இளவரசர் பிலிப்புக்கு கடந்த 2013 ஜூன் மாதம் வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு பெரிய அளவிலான உடல்நலக்குறைவு எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை