அவதானம் - நாளை 0-3 வில்லைகளுள்ள சிற்றுந்துகள் மட்டுமே!!

PARIS TAMIL  PARIS TAMIL
அவதானம்  நாளை 03 வில்லைகளுள்ள சிற்றுந்துகள் மட்டுமே!!

வாகனங்களிற்கான மாசடைவுச் சான்றிதழ் வில்லைகளான, Crit'air கட்டாயமாக்கப்பட்டதன் பின்னராக, முதன் முறையாக நாளை வாகனப் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
 
நாளை இந்த Crit'air வில்லைகளில் 0 தொடக்கம் 3 வரையுள்ள வாகனங்கள் மட்டுமே பரிசிற்குள் செல்ல முடியும் என்பதனை, பரிசின் காவற்துறைத் தலைமையகம் வலியுறுத்தி உள்ளது. மீறுபவர்கள் தண்டிக்கபபடுவார்கள்.
 
 
 
அதியுச்ச வெப்ப நேரத்தில், வளிமண்டல மாசு அதிகமாக இருப்பதால், இந்த மட்டுப்படுத்தலைப் பரிசின் நகரபிதா அன் இதால்கோ கேட்டுக் கொண்டதன் பேரில், காவற்துறைத் தலைமையகம் இந்தத் தடையினை அறிவித்தள்ளது. அதே நேரம் பொதுப் போக்குவரத்துக்களில் பயணிப்பதற்காக விசேடப் பயணச்சீட்டும் நாளை செல்லுபடியாகும் என்பதும் குறிப்படத்தக்கது.
 

மூலக்கதை