காவல்துறையினர் மீது மகிழுந்து மோதல் - இளைஞர்கள் கைது.

PARIS TAMIL  PARIS TAMIL
காவல்துறையினர் மீது மகிழுந்து மோதல்  இளைஞர்கள் கைது.

சோம்ப்ஸ்-எலிசேயில் ஜோந்தாமினர்களின் வாகனத்தோடு மகிழுந்து மோதிய பரபரப்பு சம்பவத்துக்கு பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
Essonne மாவட்டத்தின் Courcouronnes பகுதியில், கண்காணிப்புக்காக வானகத்தை நிறுத்தி விட்டு காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது Audi வகை மகிழுந்து ஒன்று காவல்துறையினரின் வாகனத்தில் வந்து இடித்துள்ளது. 
 
காவல்துறை வாகனத்துடன் நேருக்கு நேர் வந்து மோதிய மகிழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மகிழுந்து சுற்றி வழைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். 
 
உள்ளே இளைஞர்கள் மூவர் இருந்ததாகவும், 19 வயதுடைய இளைஞன் ஒருவன் மகிழுந்தை ஓட்டி வந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, இது ஒரு விபத்து எனவும், கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்தே காவல்துறையினரின் வாகனத்தோடு மோதியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விபத்தின் போது, காவல்துறை அதிகாரி ஒருவர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாகவும், குறித்த மூன்று இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை