சென்னை விமான நிலையத்தில் கர்ணன்

தினமலர்  தினமலர்
சென்னை விமான நிலையத்தில் கர்ணன்

கோவை: கோர்ட் அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட் நீதிபதி கர்ணன், கோவையிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை அழைத்து வரப்படுகிறார்.

கோர்ட் அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்ய மேற்குவங்க போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன் பேரில் ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த நீதிபதி கர்ணன் நேற்று(ஜூன், 20) கோவையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கோல்கட்டா அழைத்து செல்வதற்காக மேற்கு வங்க போலீசார் கர்ணனை, கோவையிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை அழைத்து வருகின்றனர். இரவு முழுவதும் சென்னை விமான நிலைய ஓய்வறையில் கர்ணன் தங்கவைக்கப்படுகிறார். பின் காலை 11.40 மணிக்கு கர்ணனை கோல்கட்டா அழைத்து செல்ல மேற்கு வங்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

மூலக்கதை