பெருமளவானவர்கள சுகவீனத்தில் - தயார் நிலையில் வைத்தியசாலைகள் - மூவர் பலி
அவசர சிகிச்சைகள் சேவைகள் பெரிதும் சிக்கலிற்கு உள்ளாகி உள்ளன. பெருமளவான தொலைபேசி அழைப்புக்கள், வெப்பத்தினால் ஏற்படும் சுகவீனம் காரணமாக அழைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகள் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளன. பரிசில் மட்டும் 39 வைத்தியசாலைகள் (AP-HP) வெப்ப அலையினால் பாதிப்படைபவர்களிற்குச் சிகிச்சை வழங்குவதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதியுச்ச வெப்பநிலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என சுகதார அவதானிப்பு மையம் அறிவித்திருந்த வேளையில், அதனைக் கருத்தில் கொள்ளாமல் உடற்பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்ட 36 மற்றும் 39 வயதுடைய இரு ஆண்களும், 41 வயதுடைய ஒரு பெண்ணும் Hérault மாவட்டத்தில் வெயிலிற்குப் பலியாகி உள்ளனர்.