மின்னல் தாக்கி 22 பேர் பலி

PARIS TAMIL  PARIS TAMIL
மின்னல் தாக்கி 22 பேர் பலி

 

பங்களாதேஷில் மின்னல் தாக்கி கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
ஒரு வாரத்திற்கு முன்பு தான், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
 
பங்களாதேஷில், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
 
மாறிவரும் பருவநிலை அந்தப் பிரச்சினையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
இடிதாங்கியாகச் செயல்படக்கூடிய மரங்களை வெட்டியதால் தான் இந்த நிலைமை என அவர்கள் சொல்கின்றனர்.

 

மூலக்கதை