ஓ.பி.எஸ்சுக்கு மீண்டும் கோவையில் சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓ.பி.எஸ்சுக்கு மீண்டும் கோவையில் சிகிச்சை

கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த மே மாதம் 24ம் தேதி ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு மனம் மற்றும் உடல் ரீதியான புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நான்கு நாள் புத்துணர்வு சிகிச்சை முடிந்து ஓ. பன்னீர்செல்வம் கடந்த 28ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில், இரண்டாம் கட்ட புத்துணர்வு சிகிச்சைக்காக ஓ. பி. எஸ். , நேற்று மாைல மீண்டும் கோவை ஆர்ய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என தெரிகிறது.

.

மூலக்கதை