கோடநாடு கொலை வழக்கில் கைதான சயான் மீண்டும் கோவை ஜி.எச்.சில் அட்மிட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடநாடு கொலை வழக்கில் கைதான சயான் மீண்டும் கோவை ஜி.எச்.சில் அட்மிட்

கோவை: கோடநாடு ஜெ. பங்களா காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சயான்(33) கார் விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 6ம் தேதி இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து கோத்தகிரி போலீசார் அவரை கைது செய்தனர்.

கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் 7ம் தேதி அடைக்கப்பட்ட சில மணி நேரத்தில் இடது கையில் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமானதால் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை முடிந்து சயான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். சிறைக்கு சென்ற சயான் தனிஅறை கேட்டு அடம் பிடித்துள்ளார்.

இதை ஏற்க மறுத்த சிறை காவலர்கள் மீண்டும் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கைதிகள் அடைக்கப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் கோடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனோஜிற்கு நேற்று முன் தினம் இரவு மூச்சு திணறல்,வயிற்று வலி ஏற்பட்டது.

இதை தொடர்ந்து இவர், சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பின், கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை