இந்தியா தோல்வி! பாதிக்கப்பட்ட இலங்கை
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் தோற்றதன் மூலம் ஒருநாள் அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி எட்டாவது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது. இலங்கை அணி எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மறுமுனையில் பங்களாதேஷ், இலங்கையை விட ஒரு படி முன்னேறி 7ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டி முடிந்தவுடன் வெளியிடப்பட்ட ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப்படி தென்னாபிரிக்க அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது.
தரவரிசையில் முறையே 2) அவுஸ்திரேலியா, 3) இந்தியா, 4) இங்கிலாந்து, 5) நியூஸிலாந்து, 6)பாகிஸ்தான், 7) பங்களாதேஷ், 8) இலங்கை, 9) மேற்கிந்தியத் தீவுகள், 10) ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இருக்கின்றன.