இன்டர்போல் விசாரணைக்கு தயார்: தினகரன்

தினமலர்  தினமலர்
இன்டர்போல் விசாரணைக்கு தயார்: தினகரன்

சென்னை: கூவத்தூர் விவகாரம் தொடர்பாக இன்டர்போல் விசாரணைக்கு தயார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலர் தினகரன் தெரிவித்ததாவது: தி.மு.க., தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டான கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மட்டுமின்றி, பன்னாட்டு காவல்துறையான, இன்டர்போல் விசாரணைக்கும் தயார். எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால் எந்த விசாரணைக்கும் பயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை