'பிளாஸ்டிக்' அரிசி தமிழகத்தில் இல்லை

தினமலர்  தினமலர்
பிளாஸ்டிக் அரிசி தமிழகத்தில் இல்லை

சென்னை : தமிழகத்தில் 'பிளாஸ்டிக்' அரிசி இல்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில், 3,124 கடைகளில், அரிசி மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒன்றில் கூட, பிளாஸ்டிக் அரிசி இல்லை. பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டில் உள்ளதாக, பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை, சமூக வலைதளங்களில், யாரும் பகிர வேண்டாம்,'' என்றார்.

தரமற்ற கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், 94440 42322 என்ற எண்ணி லும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

மூலக்கதை