லண்டனில் மீண்டும் பதற்றம் - பலர் ஆபத்தான நிலையில்

PARIS TAMIL  PARIS TAMIL

 லண்டனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி அருகே பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று பாய்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
 
தற்போது சம்பவம் நடந்த பகுதியில் பதுகாப்பு கருதி ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மசூதியில் ரமழான் நோன்பு துறக்கும் வேளையில் வெள்ளை நிற வாகனம் பாதசாரிகள் மீது பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் எனவும் இது ஒரு இனவாத தாக்குதல் என தற்போதைய சூழலில் அறிவிக்க முடியாது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
 
கைதான நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
 
சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 

மூலக்கதை