முதல் முறையாக இறுதி போட்டியிற்குள் நுழைந்த பாகிஸ்தான்!

PARIS TAMIL  PARIS TAMIL
முதல் முறையாக இறுதி போட்டியிற்குள் நுழைந்த பாகிஸ்தான்!

 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதிக்கொண்டன.

 
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி சப்ராஸின் பந்துவீச்சு மற்றும் பாகிஸ்தான் அணியின் அபாராமான களத்தடுப்பினால் ஆரம்பம் முதல் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.
 
இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் ஜொனி பெயஸ்ரோ 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் ஹசன் அலி மூன்று விக்கெட்டுக்களையும் யுனைட் கான் மற்றும் ரகுமான் ரயீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் தமக்கிடையே பகிர்ந்துக்கொண்டனர்.
 
212 என்ற இலகுவான  வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தங்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஹர் ரகுமான் மற்றும் அசார் அலி ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை பந்தாடி 21.1 ஓவர்களில் 118 ஓட்டங்களைக் குவித்த நிலையில் 57 ஓட்டங்களுடன் பஹர் ரகுமான் ஆட்டமிழந்தார்.
 
தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைக் குவித்த அஷார் அலியும் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியினை சொந்த மண்ணில் வைத்து இலகுவாக வெற்றியடைந்தது. பாபர் ஆஷாம் 38 ஓட்டங்களுடனும் முகமட் ஹபிஸ் 31 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கையடைந்தனர்.
 
இவ்வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.போட்டியின் ஆட்டநாயகனான ஹசன் அலி தெரிவுச்செய்யப்பட்டார்.

மூலக்கதை