தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி!

 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் 19 ரன்கள் வித்யாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

 
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின், மில்லர் 75 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஹசன் அலி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
 
பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்கா பந்துவீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சால் ரன்களை குவிக்க திணறியது. 
 
ஆனால், 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், டக்வொர்த் லீவீஸ் முறைப்படி 19 ரன்கள் வித்யாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 

மூலக்கதை