காபூலில் இந்தியர்களை குறிவைத்து குண்டு வீச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காபூலில் இந்தியர்களை குறிவைத்து குண்டு வீச்சு




காபூல்: காபூலில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 முறை  குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து விட்டன.

இந்த நிலையில் நேற்று காலையில் இந்திய தூதரகத்தில் வெடித்த குண்டு இந்தியர்களை பலி வாங்க  வீசிய குண்டு. இதனால் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம் என ஆப்கானில் வாழும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகம் அமைந்துள்ள பகுதியில் நிகழும் இரண்டாவது தாக்குதல் முயற்சி இது என்றும் அவர்கள் தெரிவித்தனர். ‘யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், ஆப்கானிஸ்தான் ராணுவமும், அதிகாரிகளும் இணைந்து தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வேலையில்  தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்’ என ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.




.

மூலக்கதை