2019 உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்: ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
2019 உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்: ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகளின் பயிற்சியாளராக  டோனியுடன் இணைந்து பணியாற்றியவருமான ஸ்டீபன் பிளமிங் அளித்த பேட்டி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, 2019 உலக கோப்பை  வரை விளையாடுவார் என நம்புகிறேன். ஆனால் அதற்கு தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை டோனி உணர்ந்திருக்கிறார்.

எப்படிப்பட்ட  சிறந்த வீரராக இருந்தாலும், வயதாகும்போது சற்று தடுமாற்றம் இருக்கதான் செய்யும்.

இளம் வீரராக இருந்தபோது என்ன சாதித்தாரோ, அந்த  திறமையை மீண்டும் நிரூபிக்க டோனி தற்போது முயற்சி செய்து வருகிறார்.

டோனி அச்சமின்றி செயல்படக்கூடியவர். பேட்டிங் ஆர்டரில் அவரை  முன் கூட்டியே களமிறக்குவது இந்திய அணியின் ‘பேலன்ஸை’ பொறுத்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 10வது சீசனில் டோனி செய்த சில  ‘ஸ்டம்பிங்குகள்’ அபாரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை