காபூலில் பயங்கரம் இந்திய தூதரகம் அருகே கார் குண்டு வெடிப்பு: 50 பேர் பரிதாப பலி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
காபூலில் பயங்கரம் இந்திய தூதரகம் அருகே கார் குண்டு வெடிப்பு: 50 பேர் பரிதாப பலி?

காபூல்: ஆப்கானில் உள்ள காபூலில் ஈரான் தூதரகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று காலை கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்திய  தூதரகத்தில் இருந்து சுமார் 1. 5 கிமீ தொலைவில்தான் ஈரான் தூதரகம் அமைந்துள்ளது.

இன்று காலை நடத்திய இந்த கோர சம்பவத்தில் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் ராணுவ படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.

கடவுள் அருளால் இந்த தாக்குதலில் இந்திய தூதரக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக தப்பினர் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா  தெரிவித்துள்ளார். அதிகமானோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச  நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

.

மூலக்கதை