அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் துப்பாக்கிச்டு... ஷெரிப் உட்பட 8 பேர் பலி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் துப்பாக்கிச்டு... ஷெரிப் உட்பட 8 பேர் பலி!

மிசிசிப்பி: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் துணை ஷெரிப் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 35வயது மதிக்கத்தக்க ஒரு நபரை கைது செய்துள்ள போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்க நேரப்படி நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

Image courtesy: Twitter

லிங்கன் கவுண்டி பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாவட்ட முதன்மை அதிகாரியான துணை ஷெரீப் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மிசிசிப்பி புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 35 வயதுமிக்க ஒருவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக அப்பகுதி மக்கள் பிராத்தனை மேற்கொண்டனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை