பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னவாகும் என்று ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னவாகும் என்று ...

பூமி 365 நாட்களும் தன்னை தானே சுற்றி கொண்டும் சூரியனை சுற்றி வருகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்றே.


    ஆனால் பூமி சுற்றுவது நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தது உண்டா? அவ்வாறு நிகழ்ந்தால் எழு நிகழ்வுகள் நடைபெரும்.

அவை என்னவென்பதை காண்போம். . .
  # மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 1670 கிமி வேகத்தில் சுற்றும் பூமி சுழற்சியை நிறுத்தும் போது அனைத்து பொருட்களும் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும்.
  # பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது அதிக அளவிலான கடல் சீற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்சாது.
  # பூமி தன்னை தானே சுற்றுவது நிறுத்தினாலும் சூரியனை சுற்றி கொண்டு தான் இருக்கும் எனவே வருடத்தில் 6 மாதங்கள் இருளிலும் மீத ஆறு மாதங்கள் முற்றிலுமாக ஒளியிலும் காணப்படும்.  
  # இதனால் இருளில் உள்ள 6 மாதங்கள் பனி பிரதேசமாகவும் மீத 6 மாதம் ஒளியில் உள்ளவை பாளை வனமாகவும் மாறிவிடும்.  
  # சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும்.

இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்.
  # பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது வளி மண்டலதில் ஏற்படும் மாற்றத்தினால் காற்றின் வேகம் அணுக்குண்டு வெடிப்பினை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
  # பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தியதும் பூமியை சுற்றியுள்ள பாதுகாப்பு காந்த மண்டலம் செயல் இழந்துவிடும்.

.

மூலக்கதை