கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடர்ந்து 3வது முறையாக பார்சிலோனா அணி சாம்பியன்

தினகரன்  தினகரன்

மாட்ரிட்; ஸ்பெயினில் நடந்த கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் அலாவெஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இறுதிப் போட்டியில், பார்சிலோனா அணி சார்பில் மெஸ்ஸி (30வது நிமிடம்), நெய்மர் (45’), அல்காசெர் (45’+3) ஆகியோர் அபாரமாக கோல் போட்டனர். அலாவெஸ் வீரர் ஹெர்னாண்டஸ் (33’) ஆறுதல் கோல் அடித்தார். பார்சிலோனா அணி பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் இந்த வெற்றியுடன் விடைபெற்றார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் இந்த பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை