தோல் செருப்பு இல்லாமல் நடமாடுங்களே.. பாஜக தலைவர்களுக்கு குஷ்பு குட்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தோல் செருப்பு இல்லாமல் நடமாடுங்களே.. பாஜக தலைவர்களுக்கு குஷ்பு குட்டு

சென்னை: மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள பாஜகவின் தலைவர்கள் தோல் செருப்பு இல்லாமல் நடமாடுவார்களா? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை குஷ்பு கூறியதாவது:

என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை. இதைத்தான் சாப்பிடனும், உடுத்த வேண்டும், படிக்க வேண்டும் என யாரும் கட்டுப்பாடு விதிக்க கூடாது.

உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அதுவும் பாஜக ஆட்சியில்தான் இரு மடங்காக மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

தாவரங்களுக்கும் உயிர்கள் இருக்கிறதுதானே.. அதனால் காய்கறி, பழங்களை யாருமே சாப்பிடக் கூடாது எனவும் தடை விதிப்பார்களோ?

மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கும் பாஜகவினர் தோல் பொருட்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருப்பார்களா? பெல்ட்டுக்கு பதில் நாடா கயிறு கட்டிக் கொள்ளட்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் 40% தோல் ஏற்றுமதி நடக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய நட்டம் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

 

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை