சலசர் டெக்னோ இன்ஜினியரிங் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி
புதுடில்லி : ராஜஸ்தானைச் சேர்ந்த, சலசர் டெக்னோ இன்ஜினியரிங் நிறுவனம், தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான கட்டமைப்புகள், பிரத்யேக உருக்கு வடிவமைப்பு திட்டங்கள், மின் வினியோக கோபுரங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் சூரிய மின் உற்பத்திக்கான அடித்தளங்கள் அமைப்பது உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், அதன் நடைமுறை மூலதன தேவைகளுக்கும், நிர்வாக செயல்பாடுகளுக்கும் தேவையான நிதியை திரட்டிக் கொள்ள, பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, 33 லட்சம் பங்குகளை வெளியிட்டு, 36 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.இப்பங்கு வெளியீட்டை, ‘சாரதி கேப்பிடல் அட்வைசர்ஸ்’ நிறுவனம், நிர்வகிக்க உள்ளது.பங்கு வெளியீட்டிற்கு பின், நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.