கமலுக்கு ரூ. 15 கோடி சம்பளம்
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக, கமலுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் பிரபலங்களை ஒரு வீட்டுக்குள் வைத்து, அவர்களைக் கண்காணிப்பதுதான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி. 100 நாட்கள்வரை இப்படி அவர்கள் இருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியை, விஜய் டி. வி. க்காக தொகுத்து வழங்குகிறார் கமல்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்களை, 30 கேமராக்கள் கண்காணிக்கும். அவ்வப்போது கமலும் நேரடியாகச் சென்று அவர்களைக் கண்காணிப்பார்.
இதற்கான செட், ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் போடப்பட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதி முதல் விஜய் டி. வி. யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
இதற்காக, கமலுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறார்கள்.
.