மணிப்பூர் மாநிலத்தில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணிப்பூர் மாநிலத்தில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சமூக போராளி இரோம் சர்மிளா தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் கூறியதாவது: நான் முழுவதுமாக அரசியலில் இருந்தும் போராட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன்.

அயர்லாந்தை சேர்ந்த தேஸ்மாண்ட் ஹட்டின்ஹோவை திருமணம் புரிந்து, கொடைக்கானலில் அமைதியாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட உள்ளேன். இந்து, கிறிஸ்தவ முறைப்படி எங்களது திருமணம் ஜூன் மாதத்தில் நடைபெறும்.

எனது போராட்டங்களை பற்றிய ‘பர்னிங் ஆப் ப்ரைட்’ என்ற புத்தகத்தை படித்த தேஸ்மாண்ட், அவரது காதலை கடிதங்கள் மூலம் எனக்கு தெரிவித்தார்.

சுமார் 4 ஆண்டுகள் கழித்து அவரது காதலை ஏற்றுக்கொண்டேன்.

கொடைக்கானலை தேர்ந்தெடுக்க அன்பான மக்கள், அமைதியான இயற்கை சூழ்நிலை, தூய்மையான காற்று ஆகியவையே காரணம். மேலும் என்னால் இங்கு சுதந்திரமாக சாலையில் நடந்து செல்ல முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை