பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்த 2 பேர் கதி என்ன?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்த 2 பேர் கதி என்ன?

துரைப்பாக்கம்: சென்னை சோழிங்கநல்லூர்  நியூ குமரன்நகர் பள்ளிக்கூட சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 20  அடி ஆழமும் 6 அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பக்கவாட்டில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டு வருகிறது.

இன்று காலை வந்தவாசியை சேர்ந்த சுப்பிரமணி (43), மற்றொரு சுப்பிரமணி (54) உள்பட 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில் மேற்கண்ட 2 பேரும் மண்ணில் புதைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அவர்களை மீட்க போராடினர்.

ஆனால் முடியவில்லை. தீயணைப்புத்துறை மற்றும் செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணில் புதைந்த இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


.

மூலக்கதை